Tuesday, November 24, 2009

காலையில் கோபத்திற்கு பின் உதிர்த்த எண்ணங்கள் அப்படியே !!!!

கோபங்களும் தாபங்களும் அடங்கிய பின் பல அர்த்தங்களை அறியப்படுத்தும்!!

என் கோபங்களின் பிறப்பும் இறப்பும் விசித்ரமானவை!!

கோபத்திற்கு பின் மன்னிக்கவும் என கேட்க தூண்டும்
சங்கோஜத்தை விட கோபத்தை அடக்குவது எளிது என தெரிகிறது!!

இருவரின் ஒருமுறை வறண்டு போன நட்பில்
அன்பு காவிரியை அதிகப்படி பாய்ச்சினாலும் ஈரமாவதில்லை !!
கோபத்தில் அடி வாங்கிய என் நண்பன் "திருக்குறள் படித்து விட்டு சினத்தை அடக்க முடியாவிடில் என் பயன்" என்றான்
"அதனால்தான் அடி உன் மேல் மெதுவாக வீழ்ந்தது"
பரிட்சையில் பாஸ் மார்க் கிடைத்தாயிற்று !!ஹை ஸ்கோர் பண்ண முயல்வேன்!!

என்னை இகழ்தல் மற்றவர் முன் இல்லாவிடிலும்
இகழ்தலே, அதற்கு குறைத்து மார்க் போட என் மனம் மறுக்கிறது!!!

Wednesday, July 1, 2009

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 3

குறிப்பு:கீழ் உள்ள பாகம் 1,2 ஐ படித்து விட்டு தொடரவும்

மலையிலிருந்து விளக்குகள் மிளிரும் ஊரை ரசிப்பது ஒரு சுகம்தான். அப்போ தூங்கிட்டு இருக்க ஊரை பாத்து வெட்டி பயலுக தூங்குரானுங்கனு தோணிச்சு.

ஏனோ வானுக்கும் பூமிக்கும் ஒரு இடைவெளி இல்லாமல் ஒரு இருட்டு கடலுக்குள் இருப்பதாகவே உணர்ந்தோம். காரணம் நட்சத்திரமும் லீவு போட்டிருந்தன, நிலவும் கூட யாரோட காதலுக்கோ தூது போயிடுச்சு. அப்படி ஒரு கருமையான இரவு.

இதோ எங்கள் படைகள் சிகரம் நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருந்தது. அந்த மலை பாதைதான் எவ்வளவு கல்லும் முரடுமாக, ஆனால் இந்த மானிட மனங்களுக்கிடையே காலம் தள்ளுவதை காட்டிலும் எளிமையாகவே இருந்தது. அதில் கைடு கையில் டார்ச்சுமின்ரி, காலில் சாதாரண செருப்புடன் மின்னல் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார். அவருக்கு கொஞ்சம் ஈடு கொடுத்தது நானும் ரங்காவும் மட்டுமே. உள்ள ஒரே ரணகளம்தான், வலிய வெளிய காட்டிகாம எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது. மற்ற வீரர்களுக்கு அங்கங்கு ஹால்டிங்கும்,கூடவே குளுகோசும்(ஆற்றல் ஊட்டி) தேவைப்பட்டதால், நடிப்பதில் எனக்கும் ரங்காவிற்கும் சிரமம் ஏதும் இல்லை. விக்ரமிற்கு ஆற்றல் ஊட்டி அவ்வப்போது கொடுக்கப்பட்டு உயிரூட்டப்பட்டார் பாவம். இது எதுவுமின்றி 50 பிராயத்தை கடந்த கைடு ஆச்சரியப்படுத்தினார். ஹி இஸ் த மேன்! எனக்கு தெரிந்த கன்னட பாசையில் கைடுடன் உரையாடி அவரை பற்றி தெரிந்து கொண்டது, அவர் இந்த மாறி படைகளை சொரிந்து பணம் பார்ப்பதோடு, கூடவே காய்கரி வியாபாரமும் செய்வதாக கூறினார்.

இதோ சூரியன் மலையுடன் இரவெல்லாம் ஒரே கரும் போர்வையில் புணர்ந்து விட்டு, மெல்ல வெட்கத்துடன் விழித்து பார்த்தான். நேரம் அதிகாலை 5.45 யை தொட்டிருக்கும். நாங்கள் புணர்ந்ததை டார்ச் அடித்து பார்த்து விட்டோம் என்ற வெட்கத்திலோ என்னவோ முகத்தை முழுதாய் எங்களுக்கு ஆதவன் காட்டவே இல்லை. இப்போ புரிந்தது மலை எப்புடி குட்டி போடுதுன்னு.

இதோ நாங்கள் சிகரத்தில். நாங்கள் இருந்த மலையின் அழகும் , உயரமும் பார்த்து ஆச்சர்யபட்டோம். இவ்வளவு தூரம் உயிரோடு வந்து விட்டோம். கைடுக்கு நன்றி. தளபதிக்கு நன்றி. குளுக்கோசிர்க்கு மிக்க நன்றி. ஆனால் கைடோ பேசிய தொகையை பெற்று கொண்டு உறவை துண்டித்து கொண்டான்.

மலை உச்சியில் அவரவர் வேண்டுதலை உரக்க வானுக்கு கத்தி கொண்டிருக்க,
விக்ரம் I am king of the world என்று கத்த, எனக்கு He is the KingKOng of the world என்று ஒலிப்பது போல் இருந்தது.

சிகரத்தில் நாங்கள் மட்டும்தான் என்று எண்ணி நுழையும் போதே பார்த்தால், ஒரு திருவிழா கூட்டம் டென்ட் போட்டு தங்கி இருந்தது. ஏதோ விடிந்தது பிடிக்காதது போல்,முடிந்தது அவர்கள் வேலை என்பது போல் கிளம்பி சென்று விட்டனர்.முன்னிரவே வந்து அவர்கள் தங்கி பலானதை பண்ணி இருக்க கூடும் என்று ஊகிக்க முடிந்தது. எங்களை தடுத்த காவலாளியின் திருட்டுத்தனமும் வெளுத்தது. இந்த போலிஷ்காரங்களே போலிதான் எஜமான்.

நடேசும் ரங்காவும் ஏதோ P.C.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்து போட்டோ எடுத்தாங்க. இந்த பொருமல் வேற ஒன்னும் இல்ல, வேற யார்கிட்டையும் கேமரா இல்ல.

மலையில் சுற்றி திரிந்த மேகம் உடலுக்குள் ஊடுருவி கிச்சு கிச்சு மூட்டியது. அதை முழுதாக அனுபவிக்க எண்ணி என் கவசத்தையும்(ஜெர்கின்) கழட்டி எரிந்து சுற்றினேன். என்னால் எத்தனை மேகங்களை முத்தமிட்டு அணைக்க முடியுமோ அத்தனையையும் அணைத்து கொண்டேன்.

இந்த பழங்கால புலிகேசிகள், பயந்து ஒளிந்து கொள்ள ஒரு மலை
உச்சியில் ஒரு மண்டபத்தை கட்டி விட்டு கூடவே ஒரு கோவிலையும் கட்டி விடுவார்கள். கேட்டால் கோவிலுக்காகதான் இந்த மலை உச்சி வந்ததாக சந்ததி நினைத்து கொள்ளட்டும் என நம்ப செய்ய. என்ன கள்ள தனம். வழக்கம் போல் இந்த மலை உச்சியும் ஏதோ புலிகேசியின் புகலிடமாக இருந்திருக்கு. அந்த மண்டபத்தில் இரு நாய்கள் உல்லாசமாக இப்போது வசித்து வருகின்றன. புலிகேசிகளின் வாரிசுகள்.
மண்டபதிற்கு அருகில் நெருப்பு மூட்டி இருந்தது. இதோ ஓசியில் குளிர் காய பயணப்பட்டு விட்டோம் மொத்த படையும்.

ஸ்ரீராம், பெயரிற்கு ஏற்ற முகம். அமைதி கலந்த வசீகரமான புன்னகை எட்டி பாத்து கொண்டே இருக்கும். இந்த ராமனுக்கு கொஞ்சம் தாடி, ஒரு வெள்ளை அங்கி எல்லாம் இட்டு பார்த்ததில், ஜீசஸ் கிறிஸ்ட் போலவே இருந்தார். இந்த ஜீசஸ் ராம், கொஞ்சம் அதிகமாகவே அசர்ந்தார். அசந்து குளிர் காய்ந்த இடத்தில் மட்டையானார். விட்டிருந்தால் கரி கட்டையாகி இருப்பார். நான் அவரை சுய நினைவுக்கு திருப்பி மேல் படர்ந்திருந்த சாம்பலையும் துடைத்து , ஜீசஸ் ராமிடம் இருந்து புண்ணியம் தேடி கொண்டேன்.

மீண்டும் தளபதி தலை மறைவு. நானும் நடேசும் தளபதியை தேடி கூக்குரலிட்டோம். தளபதி எந்த புதரில் இருந்தாலும் முடிப்பதை முடித்து விட்டு வந்து சேரவும் என்னும் சத்தம் மலை முழுவதும் ஒலிக்க செய்தோம். வழக்கம் போல் தளபதி காமெடியை அரங்கேற்றி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு குன்றின் மேல் நல்லவர் போல். நடேஷ் அவர் அருகில் நெருங்கும் போதே, நடேஷிடம் முன் ஜாக்கிரதையாக நீ பக்கத்தில் வரும் போதே கப்படிக்குதுனு அட்வான்சா தளபதி எடுத்து விட்டு அவரே அவரை வாரி கொண்டார்.

மற்ற நண்பர்களும் இணைந்தனர். கீழ் நோக்கி புறப்பட படை தயாரானோம். எங்களுக்கு வழிகாட்டியாக மண்டபத்தில் இருந்த நாய் இணைந்து கொண்டது. வெற்றியுடன் போர் முடிந்து திரும்பினோம்.

நீங்க கற்பனை செய்த நிகழ்வுகளை இந்த புகை படங்களுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளவும்.

நடேஷ் ஆல்பம்

ரங்கா ஆல்பம்

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 2

இவன் இப்படி நடு நிசியில் மலையை மூன்னுறிற்கு ஏலம் விடுகிறானே இது முதல்ல அந்த மலைக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தொடர்ந்து "அய் யார ஏமாத்த பாக்குற முதல்ல இங்க மலை இருக்கானு லைட் அடிச்சு காமி அப்புறம் மூன்னுறு தருகிறோம என்று கூற வேண்டும் போல் இருந்தது.

காவலர்கள் என்ற பெயரில் ராபிச்சை எடுத்துகொண்டிருகும் அவனிடம் மேலும் வாதிட பயன் ஏதுமின்றி குதிரைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அப்பொழுதுதான் புரிந்தது எந்த குருட்டு தைரியத்தில் மலைக்கு ஆள் துணை ஏதுமின்றி நடு இரவில் செல்வது என்பதை யோசிக்காமலே பேரம் பேசிகொண்டிருந்தோம் என்று உணர்ந்தோம்.கொஞ்ச நேரத்தில் எங்க டைம் காமெடி டைம் ஆயிருக்கும் இப்படி மூன்னுறையும் கொடுத்து நடுஇரவில் நட்டாத்தில் விட்டது போல். நடப்பது நன்மைக்கே என்று இடத்தை விட்டு காலி செய்தோம்.

அவ்வபோது வெறுப்பில் தளபதி என்னால்தான் காரியம் கேட்டது போல் என்னை திட்டியதுதான் வருத்ததிற்குரியது, அவர் செய்த நாற்பது ரூபாய் காமெடியை அறவே மறந்து.
திரும்பிய வழியில் இன்னொரு சொறிபடை வந்ததை அறிந்து நிகழ்ந்ததை கூறி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அது கன்னட படை. அந்த காவலாளிகள் என்ற போர்வையில் இருந்த ராப்பிச்சை காரனை கரெக்ட் பண்ணவும் வசதியா இருக்கும் என அவர்களுடன் நானே முன்வந்து பேசினேன். அப்படியே காவிரி பிரச்சனையையும் ஒரு பிட் போட்டு முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணமும் இருந்தது.

இதோ எதிர்பாராத சம்பவம்.

ஒரு எதிர்பாராத சம்பவம் இன்னொரு எதிர்பாராத சம்பவத்தால் சரி செய்ய படுகிறது.
டூரிஸ்ட் கைடு என்ற பெயரில் குரங்கு தொப்பி போட்ட ஒருவர் எங்கு இருந்து குதித்து வந்தார் என்று யோசிப்பதற்குள், வந்து தளபதியுடன், மலைக்கு குறுக்கு வழியில் அழைத்து செல்வதாக பேரம் பேச தொடங்கி விட்டார். இவர் மரத்தில் ஒளிந்து இருந்து ஏமாந்து வரும் படைகளை எல்லாம் வழி மறித்து சொரிந்து விடும் புண்ணிய தொழில் செய்கிறவர் போல. அவர் குதிரைகளை மலை அடிவாரத்தில் கட்டி பார்க் செய்வதற்கும் ஏற்ப்பாடு செய்து தருவதாக கூறினார். இத்தனையும் அதே மூன்னுறில் . இந்த டீலிங் அந்த நேரத்தில் எங்களுக்கு ரெம்ப பிடிச்சு இருந்தது. மேலும் நம்முடன் அந்த கன்னட படையையும் சொரிந்து கொண்டால் மூன்னுறு பாதியகுமே என்ற அற்ப ஆசை வேறு.

என்ன செய்வது அந்த சொறி படை எங்களை வெறுப்படைய செய்தார்கள் வேறு திட்டத்துடன். என்ன செய்வது பேசியதில் இரு படைகளுக்கும் சொறிவதற்கு உடன்பாடு ஏற்ப்படவில்லை. எங்க தளபதியையும் படையின் பலத்தையும் பார்த்து கொஞ்சம் நடுங்கியது போல் தோன்றியது. தளபதியின் ஆணை படி மூன்னுறு கொடுத்து கைடுடன் தனியாகவே சொரிந்து கொள்ளலாம் எனும் முடிவு ஒரு மனதாக அமலானது.

இதோ குதிரைகளை கைடு காட்டிய இடத்தில கட்டி ஓய்வெடுக்க வைத்து விட்டு, கிளப்புங்கள் என்று உற்சாகத்துடன் டார்ச்சையும் ஆன் செய்து கிளம்பி விட்டோம் சிகரத்தை நோக்கி. சிகரம் அடிவாரத்திலிருந்து சுமார் 5 KM தொலைவில் உள்ளது என்று கைடு கூற ,நாங்க கொஞ்சம் ஜெர்காயி பயந்தோம். இருந்தாலும் தளபதி தந்த உற்சாகத்தால் அது மறைந்தது.

இந்த சீன்ல கவுண்டமணி தலையில் டார்ச் வைத்து கொண்டு செய்யும் காமெடியே நினைவுக்கு வந்தது. அந்த மாறி இப்ப இன்னொரு காமெடி சீன் இருக்கு. அடிவாரத்தை கூட தாண்டவில்லை அதற்குள் அடிவயிற்றை கலக்கி விட்டது அருணுக்கு. இதே சீன் தளபதியை வைத்து அரங்கேறி இருந்ததால் சக வீரர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருட்டிலே வயலுக்கு ஒரு வழியாக அருண் உரம் போட்டு மற்ற படி முடித்து விட தொடர்ந்தோம். இதில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கைடு எங்களை அவசரபடுத்தி கொண்டிருந்தது காமெடி.

மலை இருளில் கரிய நிற ஆடை அணிந்து உறங்கி கொண்டிருந்ததால் ,முழுதாக அது மலைதான் என்று உணரவும் முடியவில்லை. ஏதோ கைடு காட்டும் பாதயை தொடர்ந்தே சென்றோம். டார்ச்சை வைத்து கொண்டு மழையின் கூந்தலை பேன் பார்த்து கொண்டே ஏறுவது போல்.
மலையில்தான் எத்தனை சின்ன சின்ன குன்றுகள். மலை எவ்வாறு இத்தனை குட்டி போட்டது என்று ஊகிக்க முடியவில்லை. இன்னும் குட்டி போட்டு கொண்டுதான் இருக்கானு மனசுல ஒரு கேள்வி வேற.

முதலில் மலையில் சந்தித்த ஜீவன் ஒரு பூரான் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தது. எப்படி இந்த மலைக்கு வந்திருக்கும். எத்தனை நாள் ஆகி இருக்கும் என்று யோசிக்கும் போதே மற்றவர்கள் கடந்து தூரமாக, ஜெர்காயி ஓடி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

அடுத்து சந்தித்தது ஒரு தவளை. அதன் மேல் டார்ச் அடிக்க அது கொஞ்சம் சங்கடமாகி முறைத்தது. சங்கடத்தின் காரணம் ஏதோ இரவு நேர முக்கியமான மேட்டராக இருக்கலாம். ரங்கா என் வேண்டுகோளுக்கிணங்க அந்த தவளையின் அனுமதி இல்லாமமலே அதை அவர் போட்டோ பெட்டியில் பதிவாக்கி கொண்டார்.

ஸ்கந்தகிரி பயணம் பாகம் 1

ஸ்கந்தகிரி - பயண அனுபவம் என் மனம் எடுத்த நினைவு படங்கள்,இங்கு பிரிண்ட் போட பட்டிருகின்றன ரசிப்பதை ரசிக்கும் படியாக எழுதுவது கொஞ்சம் கஷ்டமாதாயான் இருக்கு என்ன பண்றது ஒரு படைப்பாளினு பார்ம் ஆயாச்சு பெங்களூர் ஸ்கந்தகிரியில் இருந்து 80 km தொலைவில் சுவாசித்து கொண்டிருக்கும் ஒரு மலை பயண நாள் அன்று மேகம் கொஞ்சம் மப்பாதான் இருந்த்து, மலை ரசிக்க மழை தடை ஆகி விடுமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஆனால் மழையும் கடும்குளிரும் கொஞ்சம் வழிவிட்டு எங்கள் பயணத்தை இதமாக்கின இதோ எட்மண்ட் ஹிலரிகளாக பிறப்பட்டு விட்டோம் நடு இரவில் ஏதோ போர்க்கு செல்வது போல் எட்டு வீரர்கள்(அமீன்,மொகைதீன்,ஸ்ரீராம்,ரங்கா,நடேஷ்,விக்ரம்,அருண் மற்றும் நான் )இதில் அமீனை தவிர உள்ள மற்ற ஆறு பேருக்கும் நான் இன்றுதான் அறிமுகம் நான்கு குதிரைகள் எங்க இரு சக்கர வாகனங்கள்.கவசமாக ஜெர்கின்கள் .வாளுக்கு பதில் கையில் டார்ச் லைட் இந்த சொறி படைக்கு தலைவலி இல்ல தளபதி அமீன் இவர் சொறிமுகம் மன்னிக்கவும் அறிமுகம் சொல்லியே ஆக வேண்டும் தளபதி என்றவுடன் கட்டபொம்மன் ரேஞ்ச் எல்லாம் இல்லை இது ஒரு 24 ம் புலிகேசி மண்டையில் மூளைக்கு பதில் மண் இருப்பதால்,கொஞ்சம் முடி அதிகமாக வளந்திருக்கும்.அதை அழகு என்று அவர் நினைத்து கொண்டு,உலகமும் அதே எண்ணுகிறது என்று ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி. மற்றவர் சொரிமுகம் அவ்வப்போது சொரியப்படும்
இருட்டு கடலில் எங்கள் குதிரைகள் படு வேகத்தில் நீச்சலடிக்க துவங்கின.விளக்குள்ள சாலைகளும்,விளக்குகள் இல்லாத சாலைகளும் அவ்வபோது இரவையும் பகலையும் மாறி மாறி காட்டி கொண்டிருந்தன.

இதோ எதிர்பாராத சம்பவம்

இருள் பல காரியங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்
ஆனால் வண்டி ஓட்டுவதற்கு நிச்சயமாக இல்லை

நடேசன் நட்டானது அப்படி விளக்கில்லாத ஒரு சாலை
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றாக இருந்த சாலை
இரண்டாக பிரிந்திருந்ததை அறியாமல்
பின் அமர்ந்து வந்த சக வீரர் விக்ரமின் ஒரு மொக்கை ஜோக்கை
ரசித்து கொண்டிருந்த நடேசன் நடுவிலே சென்று விபத்துகுள்ளகினான்

சென்று பார்க்கையில் சரியான அடி, அவனுக்கு இல்லை
அவன் குதிரைக்கு. குதிரை அடிவாங்கி அவனையும் விக்ரமையும் காப்பாற்றியது. விக்ரம் ஒரு சட்ட கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடதக்கது.விபத்தில் இருந்து சாதரண நிலைக்கு திரும்ப எடுத்த நேரம் முடிந்தவுடன் பயணம் தொடர்ந்தது

அடுத்த எதிர்பாராத சம்பவம்.
இது ஒரு காமெடி சீன். தளபதிக்கு சக வீரகளிடமிருந்து பயணம் தொடங்கும்போதே 60 KM குள் செல்ல வேண்டும் என வேண்டுகோள்.அதையும் மீறி வேகமாக சென்று எங்கள் பார்வையில் இருந்து மறைந்த தளபதி, ஒரு ஓரமாக சாலையின் அருகே அன்லோடிங் செய்து கொண்டிருக்க நாங்க ஷாக் ஆயிட்டோம். அப்புறம் என்ன அவசரத்தை என்ன செய்வது என்று தலையில் அடித்து கொண்டு தளபதிக்கு குடிக்க எடுத்து வந்த நீரை கொடுத்து அன்லோடிங்கை அமைதியாக முடித்து விட செய்தோம்.

இதற்கெல்லாம் காவல் போல நின்று கொண்டிருந்தது நான், மொகைதீன்(என் குதிரையில் பின் அமர்ந்து வருபவர்),அருண்(அமீனுடன் பயணிப்பவர் பாவம்). இந்த சம்பவம் முடிந்த நிலையில் மற்ற தோழர்களும் வந்து இணைந்தனர். அடுத்து சொல்லவா வேண்டும் , தளபதியை கொஞ்சம் மொகைதீன் இந்த சீனை வைத்து டேமேஜ் செய்ய பாவம் தளபதி பப்ளிக் பப்ளிக் என்று கட்டுப்படுத்த முயன்றும் இயலவில்லை. அவ்வபோது தளபதி இந்த சீனால் வாரிவிடபட்டார்.

பயணம் தொடர்ந்தது ஸ்கந்தகிரிக்கு. இடது புறத்தில் செல்லும் வழியை ஒரு வழியாக அடைந்தோம். அது ஒரு தலைவர் சிலையால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தலைவர்கள் சாலைகளின் பெயரிலும், பேருந்து நிறுத்த பெயரிலுமே பெயரளவில் இருகிறார்கள்.
அவர்களை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும்
என்பதை தப்பாக புரிந்து கொண்டோமோ என்னவோ.எத்தனை பேர் அண்ணா சாலை என்று அழைக்கும் போது அறிஞர் அண்ணாவை நினைப்பவர்கள். எனினும் அந்த சிலை ஸ்கந்தகிரிக்கு வழிகாட்டியாக
கம்பீரமாக இருந்தது.

தொடர்ந்த வலியின் வாசனை வைத்தே கண்டு பிடித்தேன் அது கிராமங்கள் என்று.அந்த மணம்தான் அங்கு வாழும் வெள்ளந்தி மனிதர்களின் மனம்.

அடுத்த எதிர்பாராத சம்பவம். ஸ்கந்தகிரியில் எங்களுக்காக மலை அடிவாரத்தில் தூங்குவது போல் காத்திருந்தது. இது காமெடி கலந்த சீரியசான சீன்.

ஸ்கந்தகிரி மலை அடிவாரம். நள்ளிரவு 2 மணி இந்த அடிவாரமும் வித்தியாசமின்றி ஒரு கோயில் மண்டபத்துடன் இருந்த்து.குதிரைகளை கட்டி பார்க் செய்வதற்குள் மண்டபத்திலிருந்து இரு உருவங்கள் எழுந்து நின்றன.அவைகள் பேய்கள் என்று ஊகிபதற்குள் அருகே வந்து காவல் அதிகாரிகள் என்று உறுதி செய்தன.

முதலில் மலைக்குள் செல்ல அனுமதி இல்லை எனறார்கள்
பிறகு 7 மணிக்கு மேல் வாருங்கள் என்றனர்
பிறகு நாங்கள் குழம்பி நிற்கையில், வெட்டுவதை வெட்டி விட்டு
பார்க்க செல்லுங்கள் என்றனர்.

இத்தனையும் கன்னடத்தில் அவர்களுடன் உரையாடி இல்லை போராடி சக மக்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் என்றாகி விட்டது

இதோ இந்த சீனில் தொலைந்து போன தளபதி, திடீர் என்ட்ரி ஆகி நாற்பது ரூபாயை காவலர் கையில் வைத்து காமெடி செய்ய, கொதித்து எழுந்த அந்த காவல் அதிகாரி. சில பல கன்னட வார்தைகளால் அர்ச்சனை நடத்தி கொஞ்சம் டெரர் ஆனது போல் நடித்தான்.

இப்பொழுது கன்னடத்தில் உரையாட தெரிந்த ஒருவர் உதவி மிகவும் தேவைபட்டது. அப்பொழுதுதான் அருண் என்டர் ஆகி கன்னடத்தில் உரையாட ஆரம்பித்தார். அட பாவி இவ்வளவு நேரம் நான் பைத்தியக்காரன் போல் அந்த போலீசிடம் போரடினேனே இவரை வைத்து கொண்டு என நினைத்து கொண்டேன்.

காவலனுக்கு லஞ்சம் முன்னூறு என்று அறிந்தவுடன்
நாற்பதிலிருந்து, 100,200௦௦...என்று படி படியாக முன்னேறி 300௦௦ ல் நின்றோம்.
ஆனால் அந்த போலீஸ் இப்போது மனதை மாற்றி கொண்டு திரும்பி சென்று விடுங்கள் என்ற பாட்டை மறுபடியும் பாட தொடங்கினான்

Thursday, June 4, 2009

Theme to celebrate Environment Day from Me

Please leave your vote for the one you liked...Thanks

"One day to think beyond Cubicle, All days to act up on"

"To water the plants, Plant the plants"

"There are people to fight for earth, Lets unite to save the earth"

"Lets inject G(Green) +ve to our neurons today"

"Lets our blood be red, Lets make our mind green"

"Wish Green, Think Green"

"To love nature, think about nature"

"Earth cant insure its life,Its our duty to ensure earth has a life"

"To Breath O2, Reduce CO2"

Tuesday, June 2, 2009

அரவணைப்பு

இரு சக்கர வாகனத்தில்
ஒரு மினி குடும்பம்!!

குழந்தையை ஒரு கையில்
கணவனை மறு கையில்
தாங்கியவாறு தலைவி..

வாகனம்
பாலத்தில் ஏறுகிறது
'U' வளைவில் வளைகிறது
பள்ளங்களில் குதிக்கிறது
வேகத்தடையில் சீறுகிறது

இத்தனையும் தாலாட்டாய்
நினைத்து தூங்கும் குழந்தை!!

குழந்தைக்கு,
தாயின் அரவணைப்பில்
போர்களமும் தொட்டில்தான்!!
பூகம்பமும் தாலாட்டுதான்!!

Tuesday, May 12, 2009

Nam Vaaku Nam Naatirkaka

அரசியல் கட்சிகள் நடத்தும் காட்சிகள்
அரங்கேறிகொண்டு இருக்கிறது

இலங்கை தமிழரை மறந்து இருந்த கட்சி
தமிழ் ஈழம் தருவோம் என்று குரல் எழுப்புகிறது

தமிழ் ஈழம் ஆதரித்த கட்சிகள்
அந்த கொள்கைக்கு எதிர் கட்சியுடன் இனைந்து கொண்டன

அந்த எதிர் கட்சிகள் தேர்தலுக்காக
அந்த கொள்கையை ஆதரித்து கேவலமின்றி
இங்கு பிரச்சாரம் செய்கின்றன

கொள்கையில் ஒரு பிடிப்பில்லை

ஏன் இங்கு தமிழ் ஈழத்திற்காக
குரல் கொடுக்கும் தமிழ் மக்கள்
இவ்வளவு நாள் தேர்தலின் பொது
இந்த பிரச்னையை முன் வைத்தார்களா

தமிழகத்தில் அடிக்கடி ஏற்ப்படும்
மின் வெட்டிற்கு கொடுக்காத குரல்
ஈழ தமிழர்க்கு கொடுக்கபடுகிறது

ஏன் இதில் தமிழன் நலம் பாதிக்க படவில்லையா

இல்லை போராடும் தலைவர்கள்
மின்வெட்டை பார்த்ததில்லையா

விவசாயிகள் தூக்கிலிட்டு தொங்கும் பொது
உங்கள் குரல் எங்கிருந்தது

ஈழ பிரச்சனயை முன்னிறுத்துங்கள்

அதற்காக உள்ளூர் பிரச்சனையை
மறந்து விட்டு வாக்கு அளியுங்கள் என்று
சொல்ல எந்த அனுமதியும் இல்லை உங்களுக்கு

என் வாக்கு முதலில் என் நாட்டின்
தலை எழுத்தை தீர்மானிக்கட்டும்

நான் இலங்கை தமிழர்க்காக மத வாத கட்சிகளுக்கு
ஒட்டு போடா முடியுமா என்ன

கோத்ரா சம்பவமும் அங்கு இறந்த
முஸ்லிம் தோழர்களின் உயிர் இன்னும்
நினைவில் இருந்து நீங்க வில்லை

இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில்
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கால் சதவிகிதம் கூட இல்லை
அது பிரச்னை என்று தோன்றவில்லை

அதற்கு போர்க்கொடி பிடித்து தீர்வளிக்க வேண்டும்
என்று தோன்றாத போது இலங்கை தமிழரை காக்க வேண்டும்
என்று தேசத்தில் உணர்வில்லை என்ற கேள்வி நியாயமற்றது

நாம் தனியாக இருந்து
எதையும் பெற்று விட முடியாது

தமிழன் உணர்வு ஒற்றுமையை ஒருமைப்பாட்டை
உணர்த்தட்டும்
இந்தியாவில் பிரிவினையை வேண்டாம்
இல்லை தமிழ்நாட்டிற்கும்
தமிழ் ஈழம் நிலை வர வியப்பில்லை

வாக்கு நம் நாட்டின் ஐந்து வருட தலை எழுத்தை
நிர்ணயிக்க போவது
அதில் நம் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு
முதலிடம் தந்து வாகளியுங்கள்

Wednesday, April 1, 2009

பெண்

பெண்ணே நீ பிறரால் ரசிக்க பிறந்தாய்!!
ஆனால் மனதால் ரசிக்க மறந்தாய்!!
பூவை நீ ரசித்திருந்தால்
சூடியிருக்கமாட்டாய்!!
ரசித்துப்பார் ரசிக்கப்படுவாய்!!
நேசித்துப்பார் நேசிக்கப்டுவாய்!!

Thursday, March 26, 2009

Therdhal

தேர்தல் காலம்,
வெள்ளை அணிந்த கொள்ளையர்களின்
வசந்த காலம்

தேர்தல் நாள், கரை படிந்த கரங்களை
தேர்ந்தெடுக்க என் விரல்கள் கரையாகும் நாள்

பிரச்சாரம், குரைக்கும் நரிகளின் ஓயாத ஊர்வலம்

நடிகர்கள், வாய்ப்பில்லாதவர்களுக்கு
வில்லனாக நடிக்க வாய்ப்புகள்

ஜனநாயகம் ,ஜனவில்லன்களின் கைய்யால்
பந்தாடப்படுவது

அறிக்கை, திருடர்களே இலவசங்கள்
பட்டியலிடும் வேடிக்கை

கட்சி பெயர்கள்,
எல்லா ஓநாய் கூட்டங்களுக்கும்
பெயர்கள் வேறு வேறு,
இதில் கட்சி தாவல் என்று செய்தி வேறு

அரசியல்வாதிகள், காரி உமிழ்ந்தும் மீண்டும் மீண்டும்
வாசல் வரும் கரை வேட்டிகள்

ஊராட்சி ஒன்றியங்கள் தயார் நிலையில்
வையுங்கள் நாய் வண்டிகளை,
வெளியில் வரும் சொறி நாய்கள் அனைத்தையும்
வேட்டையாடுவதற்கு

தாய்மார்களே தயார் நிலையில் வையுங்கள்
உங்கள் வெலக்கமாரை,
நாட்டை சீரழிக்கும் நரிகள்
வீட்டை சுற்றி வரும் நேரம்

Wednesday, March 18, 2009

Java

ஜாவா நீ வீணாக
என் நியுரான்களில் தமிழுடன் சண்டயிடாதே

இளமையான தமிழின் வயது அறிய கூட
உன் BUffer-ல் இடமில்லை
உனக்கு வயதும் இல்லை

நீ என் நியுரான்களில் பதிந்திருப்பது
கூட தமிழ் வடிவம்தான்

உன்னில் ப்ரோக்ராம் எழுத
சிந்திப்பதும் என் தாய் தமிழில்தான்

முன்றொரு நாள் நீ இருந்த இடத்தில
C இருந்தான்
இன்று நீ
நாளை யாரோ

தமிழ் அப்படி இல்லை
என் நியுரான்கள் பிறந்து
நடை பழகியது தமிழில்தான்

தமிழ் என் உயிரில் கலந்தது
மூச்சில் நிறைந்தது

அதனுடன் சண்டையிட்டு
என் நியுரான்களில் இருந்து
வீணே இறந்து விடாதே

Monday, March 16, 2009

En Kaneer

நான் அழுத துளிக்கு மட்டும்
என் மனம் தெரியும்

எனக்காக விழுவதற்கு
எப்பொழுதும் நீ இருக்கிறாய்

கண்ணீர் நீ என் கவலையை கரைக்கும்
பன்னீர்

உன் ஒரு துளியில் என் ஓராயிரம்
கவலைகள் ஆவியாகிறது

என் மனம் பூவாகிறது

என் உயிரில் நீ மட்டும் வற்றி விடாதே
என்னை தனியே விட்டு விடாதே

En Manam

நன்மை செய்வதற்கு
நொடியும் சிந்திக்காத
என் மனம்,

சில சமயங்களில்
தீங்கிற்கும் அப்படியே
நடந்து விடுகிறது

ஆயிரம் தீமைகளை
ஒரு நன்மைக்கு மறைக்கும் சக்தி உண்டென்றால்

ஒரு தீங்கிற்கு செய்த நன்மைகளை
குழி தோண்டி புதைக்கும் சக்தி இருப்பதில் வியப்பில்லை

என மனம் அடிக்கடி படிக்க வேண்டிய கவிதை

Friday, March 6, 2009

அலுவலகத்தில் Dumb Charades

அலுவலகத்தில்
dumb charades

அதில் "மும்பை மேரி ஜான்"
திரைப்படத்தை ஊமை மொழியில்
நடித்து காட்ட வேண்டும்

இதோ நடித்தவர் கைய்யால் வரைந்த
இந்திய வரைபடத்தில்
துப்பாக்கி சூடு நடத்தி காட்ட
அடுத்த நொடியில் படம் ஊகிக்கப்பட்டது

இன்னும் சில காலங்களில் இது போல்
துப்பாக்கி சூடு எங்கும் காணும் பட்சத்தில்
எவ்வாறு இந்த படம் நடித்து காட்ட படுமோ!!

இதில் ரசித்தது
அந்த படமும் மும்பையில் நடந்த
குண்டு வெடிப்பு பற்றியது

இதோ என் ஞாபக மறதியையும் மீறி
நினைவுக்கு வந்த தினங்கள்
9/11 - அமெரிக்கா
7/7 - லண்டன்
27/12 - பாகிஸ்தான் பெனஜிர்
25/7 - பெங்களூர்
26/7 - (அகமதாபாத்-டெல்லி)
26/11 - மும்பை
3/3 - பாகிஸ்தான்

மனங்கள் இல்லா மனிதர்கள்
தினங்களுக்கு இரத்த திலகமிடுகிறார்கள்
பிணங்களால் மண்ணிற்கு உரமிடுகிறார்கள்

புரியவில்லை
என்ன வேண்டும் என்று இந்த
மா மனிதர்களுக்கு!!

Thursday, February 26, 2009

Kadavul

கண்கள் இல்லை உனக்கு
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்

பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்

வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்

இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்

இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்

இந்த பூமி சொர்க்கமாகட்டும்

என் தங்கை

அன்போடு என்னை அடிப்பவள்
அருகில் அமர்ந்து படித்தவள்

தேர்வு பொழுதுகளில்
அவளுக்கு நான் அலாரம்
எனக்கு அவள் அலாரம்

அன்னை பகிர்ந்து அளித்ததை
எனக்கு பகிர்ந்து கொடுத்தவள்

என்னை விட என் கல்வியில்
நம்பிக்கை வைத்தவள்

என்னை விட கல்வியை
நன்று கற்று கொண்டிருந்தவள் கூட

தொடர்ந்திருந்தால் ஆகி இருப்பாள்
மருத்தவராக, பொறியாளராக

இன்று மகளுக்கு
பாடம் சொல்லி கொடுத்திருக்கும் அன்னை

பறக்க நினைக்கையில்
தங்க தாலியால் அவள் சிறகு கட்டி
கூண்டிலும் அடைத்தது இந்த சமூகம்

பூபோல் சிரித்திருப்பாள்

புன்னகையில் பதிலளிப்பாள்
சில நேரம் கண்ணீரிலும்

புத்தகத்தில் புதைந்திருப்பாள்

இன்று எப்போதாவது புன்னகைகிறாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
பொறுப்புகளை சுமக்கிறாள்

பூமி மாற்றமடைய
பல ஆயிரம் ஆண்டுகள்

இந்த பூவில்
இத்தனை மாற்றங்கள்
ஆச்சரியம்!!

Saturday, February 7, 2009

Pillaikalum Pallikalum

பெற்றோர்களே
ஒழுக்கங்களை வாழ்க்கையிலிருந்து
சொல்லிகொடுங்கள் பிள்ளைகளுக்கு!!

மதங்களில் இருந்து மட்டும் சொல்லப்படும்
ஒழுக்கங்கள் மதங்களில் மட்டும் வாழ்கிறது!!
மனங்களில் இருந்து தேய்கிறது!!

தேச பற்று
ஜன கன மன விழும்
தேசியக்கொடி வணக்கத்திலும்
சுதந்திர தின விழாவில் மட்டுமே சொல்லபடுவதால்
தேசத்தில் நேசமும் இல்லை
பற்றுதலும் இல்லை

குழந்தைகள் பூக்கள்
அதில் ஆசிரியர்கள் தேன் எடுக்கட்டும்
இரத்தத்தை அல்ல

போர்க்கு செல்லும்
கோழையில் முகத்தில் கூட புன்னகை!!
பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் இல்லை!!

எழுதுகோலை கூர்மையாக்க தெரிந்த பிள்ளைகளுக்கு
அறிவை கூர்மையாக்க சொல்லப்படுவதில்லை!!

அறிவியல் அறிவு இல்லாத இயலாக
தமிழ் தேர்வில் தேறும் அளவுக்கு
வரலாறு வருடங்கள் நினைவு கூற
கணக்கு தேர்வில் 100 எடுப்பது எப்படி
என கற்பிக்கபடுவதால்,
அனைத்தும் இறக்கிறது!!
சிந்திப்பதை சிதைக்கிறது!!

எழுதி எழுதி
விரலில் காய்த்தது போல்
மூளையும் காய்த்து விட்டதுதான் மிச்சம்!!

புத்தக மூட்டையுடன்
பிள்ளைகளை பள்ளி சேர்க்கும்
தாய்மார்கள் பார்க்கையில்
பள்ளிகள் அவர்களுக்கா
இல்லை குழந்தைக்கா
என சந்தேகம் எழுப்பும்!!

அந்த சிறிய மூளைக்குள்
இவ்வளவும் திணிக்கப்பட்டு இறக்கிறது!!

பள்ளிகளே
எழுதவும் படிக்கவும்,கூடவே
சிந்திக்கவும் தூண்டிவிடுங்கள் !!
இனி IIT கள் அதிகமாகட்டும் இந்தியாவில்!!

Thursday, February 5, 2009

Manangal Valigal Palagattum

நம் மனங்கள் வலிகள் மறந்தன!!
கண்கள் கண்ணீர் மறந்தன!!
உயிர்கள் துடிப்பது மறந்தன!!
பூ மோதினால் பூகம்பம் என்ற நிலை!!

நம் உயிர்கள் AC யில்
இருந்து வாழ பழகி விட்டது!!

கடைசியாக வலித்தது
அலுவலத்தில் சக ஊழியர் மோதியது!!

இறுதியாக அழுதது
காய்ச்சலுக்காக மருத்துவர் ஊசி இட்டது!!

இறுதியாக இழந்தது
சம்பள உயர்வில் எதிர் பார்த்தது குறைந்தது!!

இதோ இலங்கை எனும் தேசம்,
நிலாவில் இருந்து பார்த்தால்
இரத்த கரையுடன் ஒரு புள்ளி,
பூமிக்கு இட்ட திலகம் போன்று!!

இங்கு வாழ்க்கை தொலைப்பதற்கு!!

நொடிகள் உயிர்களை பிடித்து கொள்ள!!

இரத்தங்கள் கண்ணீராக!!

கண்ணீர் வற்றியவயாக!!

மரணங்கள் ஒரே விசேஷங்களாக!!

ஓலங்கள் ஓசையாக!!

மண்டை ஓடு விளையாடும் பந்துகளாக!!

கோவில்கள் ஒழிந்து கொள்வதற்காக!!

உயிரை பிடித்துக்கொல்வதே வேலையாக!!

நேற்று காதலர்கள்
இன்று அவர்கள் காதல் மட்டும்!!

நேற்று நேசித்தவர்கள்
இன்று அவர்கள் நேசங்கள் மட்டும்!!

இனியாவது நமது உயிர் வலிகளுக்கு
பழகட்டும்!!

வலிகளை உணர பழகட்டும்!!

Wednesday, January 28, 2009

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்

பூமியோடு புணர நினைத்து
முடியாமல் சிலிர்த்து
அவிழ்த்த ஆடை இலைகள்!!

இதோ மரம் போல்

நான் என் வெட்கம் அவிழ்த்தேன்
நீ ஒரு போதும் வெட்க்கப்படவில்லை!!

என் நேரம் உனக்காக அவிழ்த்தேன்
உன் நொடியும் என்னிடம் சேரவில்லை!!

என் தூக்கம் அவிழ்த்தேன்
உன் கனவில் ஒரு நொடியேனும் நான் இல்லை!!

என் கண்ணியம் அவிழ்த்தேன்
உன் அறை கூட என் கன்னம் தீண்டவில்லை!!

இனி உயிர் அவிழ்த்தால்
உன் பார்வையாவது என் உடல் தீண்டுமா!!

Sunday, January 25, 2009

PaniPor

பூமியை அணைக்க
துடிக்கும் சூரியனை
வரவிடாமல் பனிப்போர்
நடத்தியது காலை பனி!!

தூரத்தில் பனி
அருகில் சென்று
அணைக்க நினைத்தால்
நழுவி சென்று
தூரமாகும்!!
என்ன கண்ணாமூச்சி ஆட்டமிது
அதிகாலையில்!!

இதோ அங்கங்கு
பனியில் நடந்து இருந்த மனிதர்கள்
கண்ணை கட்டாமல் கண்ணாமூச்சி
ஆடுவதாய் பட்டது!!

சிலந்தி வீடுகள்
பனி துளியில்
விளக்கேற்றி விழா
நடத்தியது!!

இந்த உயிர் சென்று
குத்தும் பனியில்,
காதலியின் 100%
முத்தமும் சூடேற்றுமா
என சந்தேகம் எனக்கு!!

எழும்பும் சதையுமாக
70 கிலோ பிண்டம்
தாங்க முடியவில்லை
குளிரை!!
மில்லிகிராம் பூக்கள்
இதில் சிரித்து மகிழும் அதிசயம்!!

Manidham

புல்லாங்குழலை மூங்கிலல்லாத
இன்னொரு மரத்தில் கட்டி
வைத்து விற்று கொண்டிருந்தான் சிறுவன்

புல்லாங்குழலாய் மாற
வழியில்லை என்றாலும்,
அதை சுமந்து விற்பதற்கு
இன்னொரு மர கம்பு
மாட்டேன் என்று சொல்லாமல்
மகிழ்ந்து குனிந்தது!!

இது மறந்துபோன மனிதத்தை
மரங்கள் மனிதர்களுக்கு
உணர்த்தியாதாக கண்டேன்!!

மனிதர்களே
இயற்கையை உற்று கவனிப்போம்!!
தொலைத்த வாழ்க்கையை
தேடி தேடி தொலைந்திடுவோம்!!

Tuesday, January 20, 2009

My ipod Shuffle(En Kuyil)

ஆப்பிள் வழங்கிய சாதனத்திற்கு
அவன் மெல்லிய உருவம் கண்டு
நான் இட்ட பெயர் குயில்!!!

இந்த குயில் பாட தெரிந்த
ஊமை!!

இவன் ஊமை மொழிகள்
பாடு,
நிறுத்து,
வரிசையை மாற்று,
சத்தத்தை கூட்டு, குறை
இவற்றில் அடங்கும்!!

அலுவலத்தில்
அன்பளிப்பாக கிடைத்தவன்!!
அவனுக்கு அன்பளிப்பாக
எனை ஆக்கி கொண்டான்!!

இதோ இவன் இதழ்களும்
என் செவிகளும் சேர்ந்த நேரம்,
சித்ராவும்,ரெஹ்மானும்
காதருகில் கச்சேரி நடத்தும் நேரம்!!

வைரமுத்து வரிகளின்
ஆழ்ந்த அர்த்தங்களை
அறிய வைத்தவன் இவனே!!

இருவரும் இப்படி சிநேகம்
கொள்வோம் என்று
நினைக்கவில்லை அன்று!!

இவன் இன்றி என் பொழுது
இனிய பொழுது இல்லை!!

இவனின்றி என் தனிமையில்
இனிமை இல்லை!!

Thursday, January 15, 2009

இரவை முழு அர்த்தமாக்கு!!!

இறுக்கம் என்ற சொல்லை
நம் இரவில் செய்து பார்ப்போம்!!
அதை மிஞ்சி விட தினமும்
முயற்சி செய்து பார்ப்போம்!!

அணைப்புக்கு முழு அர்த்தம்
தந்து பார்ப்போம்!!
நம் செல்களெல்லாம் முத்தமிட்டு
சிலிர்க்க செய்து பார்ர்ப்போம்!!

நம் கைகளுக்கு ஓய்வுதனை
இரவெல்லாம் ஒத்தி வைப்போம்!!
நம் வெட்க்கம் எனும் சருகுகளை
காமத்தீயில் போட்டெரிப்போம்!!

நம் பகல் வேலை இந்த யாகத்திற்கு
விரதம் என்று கொள்வோம்!!
இரவெல்லாம் விரதத்தை முடித்து
கொண்டே இருப்போம்!!

வேண்டாம் வேண்டாம்
ஒய்வு வேண்டாம் நம் செல்களுக்கு!!
அவை எல்லாம் முத்தமிட அணைத்து கொள்க !!
அணைப்பு என்ற சொல்லின் அர்த்தம் சேர!!

இந்த இருள் மைதானத்தில்
நாம் விளையாடும் இரு வேறு அணியினர்!!
போட்டியின்றி புதுமை இல்லை
புத்திக்கு சொல்லி கொள்வோம்!!

ஒவ்வொரு இரவிற்கும் ஒரு புதுமை
சொல்லி கொடுப்போம்!!
பழமையிலும் இனிமை உண்டு
கருத்தில் கொள்வோம்!!

என் இதழ் ரேகைகள்
உன் மேனியில் தேய்ந்து இறக்கட்டும்!!
உன் இதழ் ரேகைகள்
என் மேனியின் ரேகைகள் ஆகட்டும்!!

முத்தமென்றால் என்ன என்று
முத்தத்திற்கு சொல்லி கொடுப்போம்!!
முத்தமிட்டு முத்தமிட்டு
உயிர் சாறு மாற்றி கொள்வோம்!!

நாம் முத்த சண்டையில்
பயந்து ஓடிய இருட்டுதான்,
துணைக்கு சூரியனை அழைத்து வந்து
பகல் பொழுதாய் நின்றதடி!!

நம் விரதமும் தொடர்ந்ததடி!!!

Monday, January 12, 2009

Mounam etthanai Alagu!!!

மௌனம் எத்தனை அழகு என்று

வெற்றியை ஒரு துளி கண்ணீரால்
ரசித்தவனக்கு தெரியும்!!

பொங்கிவந்த கோபத்தை ஒரு நொடி மௌனத்தால்
அணை போட்டவனுக்கு தெரியும்!!

பிறந்ததிலிருந்து மௌனமாக சுற்றி கொண்டிருக்கும்
பூமிக்கு தெரியும்!!

சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களுக்கு தெரியும்!!!

கண்களின் மௌன மொழிகளால்
காதலித்தவர்களுக்கு தெரியும்!!

தனிமையில் தன் மன ஓட்டத்தை
ஒரு நிமிடம் ரசித்தவனுக்கு தெரியும்!!

ஏன் இசையை முழுமையாக ரசிக்க கூட
மௌனம் தேவைப்படுகிறது!!

இதை மறந்த மனங்கள் இனியாவது
மௌனத்தை ரசிக்க பழகட்டும்,

அப்போது பரபரப்பான சாலையும்
சத்தமில்லாமல் மௌனமாக ரசிக்க
மனம் விரும்பிடும்!!

Sunday, January 11, 2009

Indian of 2008 :)))

காலையில் அலுவலக தேநீர் வேலை
நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு!!!

இதோ தொலை காட்சி
இந்தியன் 2008 ஐ பட்டியலிட விளம்பரப்படுத்தி
கொண்டிருந்தது!!!

இந்தியாவில் அனைவரும் இந்தியர்களாக இல்லை
என்பதற்கு இன்னொரு சாட்சி!!

அவர்களை தேடி கண்டுபிடித்து பாராட்டும்
அவல நிலை இந்த பாரத தேசத்தில்!!

என்று மாறுமோ இந்த நிலை!!!

Wednesday, January 7, 2009

Payangaravadikalukku Oru Echarikkai!!!!!

பயங்கரவாதிகளே!!

இதோ உங்களுக்கு
ஒரு எச்சரிக்கை!!

எங்கள் மார்பு தாங்கிய
உங்கள் தோட்டக்களால்,
எங்கள் ஒற்றுமை விதைகளை
விதைத்து கொண்டோம்!!!

நாங்கள் விட்ட ஒவ்வொரு உயிரையும்,
தரிசாக கிடந்த எங்கள் சகோதரத்துவத்திற்கு
உரங்களாக்கி கொண்டோம்!!

நாங்கள் சிந்திய ஒவ்வொரு
துளி இரத்தத்தையும்,
ஒற்றுமை புரதம் தடவிய ஒரு லிட்டர்
இரத்தமாக எங்கள் நரம்புகளில்
பாய்ச்சி கொண்டோம்!!!

சாதரண பெண்மணியும்
நான் குண்டேந்தி முன் செல்கிறேன்,
மற்றவர் என்னை பின் தொடருங்கள்
என சொல்ல வைத்ததை,
நீங்கள் நினைவில் கொள்ள செய்தி அனுப்பி
கொண்டோம்!!!

இதோ நீங்கள் நடத்தி சென்ற கொடுமைகளை
ரசிக்க முடியாத உங்கள் மதத்தவர்களை,
எங்கள் ஒற்றுமை மதத்தில்
இணைத்துக்கொண்டோம்!!!

நீங்கள் பறித்து கொள்ளும்
ஒவ்வொரு உயிருக்கும்,
இங்கு இரு நல்ல உயிர்களை
உருவாக்கி கொள்கிறோம்!!

அதற்கு உங்கள் தோட்டாக்களை
அதிகமாக சேகரித்து கொள்ளுங்கள்
முடிந்தால்!!!

Tuesday, January 6, 2009

My point of view on Slum Dog Millonaire

Slum Dog Millionaire

A movie which tells about a story of a guy from a slum,
and how he gets a chance to participate in crorpathi TV program,
and he manages to find the answers by matching the questions with the incidents happened in his life.the coincidence which could never happen
so you can not say this story is a real life story. It is a 100% complete fantasy movie.For the questions which he does not know the answer, he picks the random ones and those are right .))

Really do not know whether the director portrays the life of a slum
or the mafia behind the child beggars
or the real faces of a TV programs...But Nothing is appealing except the portion of a slum life in the first half.

In the beginning, the characters speak in hindi, From the middle of the movie onwards,they start speak in english in sudden
I really could not find the reason behind this. So it makes the characters in the first half to move away from my heart.
and my mind finds it very difficult to fix them and watch along the rest part of the movie.

I have not lost myself in a single scene of this movie.No such scenes are touching and take me to walk along with the characters.

I really have no clue why the foriegners give dollars to the beggars
without thinking of how could a little blind beggar manage to change the currency.

How could a Person who hosts live crorpati program insults a participant
who is chaiwala in a call centre and the crowd watching this laughs along.

But the background music and the songs composed by A.R.Rehman is really appealing.

Sunday, January 4, 2009

Sogathil Nanban

சமீபத்தில் சந்தித்த நண்பன்
சோகத்தை ஒரு வாரமாக
நெருங்கிய நண்பனாக்கிய பரிதாபம்!!!

காரணம்,
அலுவலகம் அவன் அடையாள கயிறை
அறுப்பதற்கு இறுதி நாள் குறித்து விட்டது
இன்னும் ஒரு மாதத்தில்!!

என்னை கேட்டால்
கணினி துறையில் வேலை பார்ப்பதும்
சீட்டு கம்பனியில் பணம் போடுவதும் ஒன்றே
எப்பொழுது விட்டு செல்லும் என தெரியாது!!

இறந்து விடும் தேதி தெரிந்தால் கூட
இறந்த பின் நிம்மதி!!

அனால் இங்கு அப்படி இல்லை!!!
அதன் பின்தான் ஆரம்பமே!!

இதோ அவனை துரத்த
வாங்கிய வங்கி கடன் ஒரு பக்கம்!!
மாதம் வங்கி கணக்கில் விழி வைத்து
காத்திருக்கும் உறவுகள் இன்னொரு பக்கம்!!

இதற்கு கடன் வழங்கிய வங்கியை பழிப்பதா!
இல்லை வாங்க சொல்லிய உறவுகளை பழிப்பதா!
இல்லை விரட்டி விடும் வேலையை பழிப்பதா!

அவன் நம்பிக்கயை எழுப்பி விடும்
சில வார்த்தைகள் மட்டுமே
அவனுக்கு கொடுக்க முடிந்தது!!
அது தேவையும் கூட!!

இதோ அவன் நிலை
எனக்கு எப்போது என என் அறிவிலி
மனது நேரத்தை அளக்கிறது!!

இது உன் சொந்த தொழிலா என்ன
அதை கணித்து சுதாரிப்பதற்கு!!

Thursday, January 1, 2009

ThenMerku Paruva Katru- An another try in my voice

An another not a bad try Thenmerku Paruva Kaatru-- Listen to it nad post ur comments