ஸ்கந்தகிரி - பயண அனுபவம் என் மனம் எடுத்த நினைவு படங்கள்,இங்கு பிரிண்ட் போட பட்டிருகின்றன ரசிப்பதை ரசிக்கும் படியாக எழுதுவது கொஞ்சம் கஷ்டமாதாயான் இருக்கு என்ன பண்றது ஒரு படைப்பாளினு பார்ம் ஆயாச்சு பெங்களூர் ஸ்கந்தகிரியில் இருந்து 80 km தொலைவில் சுவாசித்து கொண்டிருக்கும் ஒரு மலை பயண நாள் அன்று மேகம் கொஞ்சம் மப்பாதான் இருந்த்து, மலை ரசிக்க மழை தடை ஆகி விடுமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஆனால் மழையும் கடும்குளிரும் கொஞ்சம் வழிவிட்டு எங்கள் பயணத்தை இதமாக்கின இதோ எட்மண்ட் ஹிலரிகளாக பிறப்பட்டு விட்டோம் நடு இரவில் ஏதோ போர்க்கு செல்வது போல் எட்டு வீரர்கள்(அமீன்,மொகைதீன்,ஸ்ரீராம்,ரங்கா,நடேஷ்,விக்ரம்,அருண் மற்றும் நான் )இதில் அமீனை தவிர உள்ள மற்ற ஆறு பேருக்கும் நான் இன்றுதான் அறிமுகம் நான்கு குதிரைகள் எங்க இரு சக்கர வாகனங்கள்.கவசமாக ஜெர்கின்கள் .வாளுக்கு பதில் கையில் டார்ச் லைட் இந்த சொறி படைக்கு தலைவலி இல்ல தளபதி அமீன் இவர் சொறிமுகம் மன்னிக்கவும் அறிமுகம் சொல்லியே ஆக வேண்டும் தளபதி என்றவுடன் கட்டபொம்மன் ரேஞ்ச் எல்லாம் இல்லை இது ஒரு 24 ம் புலிகேசி மண்டையில் மூளைக்கு பதில் மண் இருப்பதால்,கொஞ்சம் முடி அதிகமாக வளந்திருக்கும்.அதை அழகு என்று அவர் நினைத்து கொண்டு,உலகமும் அதே எண்ணுகிறது என்று ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி. மற்றவர் சொரிமுகம் அவ்வப்போது சொரியப்படும்
இருட்டு கடலில் எங்கள் குதிரைகள் படு வேகத்தில் நீச்சலடிக்க துவங்கின.விளக்குள்ள சாலைகளும்,விளக்குகள் இல்லாத சாலைகளும் அவ்வபோது இரவையும் பகலையும் மாறி மாறி காட்டி கொண்டிருந்தன.
இதோ எதிர்பாராத சம்பவம்
இருள் பல காரியங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்
ஆனால் வண்டி ஓட்டுவதற்கு நிச்சயமாக இல்லை
நடேசன் நட்டானது அப்படி விளக்கில்லாத ஒரு சாலை
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றாக இருந்த சாலை
இரண்டாக பிரிந்திருந்ததை அறியாமல்
பின் அமர்ந்து வந்த சக வீரர் விக்ரமின் ஒரு மொக்கை ஜோக்கை
ரசித்து கொண்டிருந்த நடேசன் நடுவிலே சென்று விபத்துகுள்ளகினான்
சென்று பார்க்கையில் சரியான அடி, அவனுக்கு இல்லை
அவன் குதிரைக்கு. குதிரை அடிவாங்கி அவனையும் விக்ரமையும் காப்பாற்றியது. விக்ரம் ஒரு சட்ட கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடதக்கது.விபத்தில் இருந்து சாதரண நிலைக்கு திரும்ப எடுத்த நேரம் முடிந்தவுடன் பயணம் தொடர்ந்தது
அடுத்த எதிர்பாராத சம்பவம்.
இது ஒரு காமெடி சீன். தளபதிக்கு சக வீரகளிடமிருந்து பயணம் தொடங்கும்போதே 60 KM குள் செல்ல வேண்டும் என வேண்டுகோள்.அதையும் மீறி வேகமாக சென்று எங்கள் பார்வையில் இருந்து மறைந்த தளபதி, ஒரு ஓரமாக சாலையின் அருகே அன்லோடிங் செய்து கொண்டிருக்க நாங்க ஷாக் ஆயிட்டோம். அப்புறம் என்ன அவசரத்தை என்ன செய்வது என்று தலையில் அடித்து கொண்டு தளபதிக்கு குடிக்க எடுத்து வந்த நீரை கொடுத்து அன்லோடிங்கை அமைதியாக முடித்து விட செய்தோம்.
இதற்கெல்லாம் காவல் போல நின்று கொண்டிருந்தது நான், மொகைதீன்(என் குதிரையில் பின் அமர்ந்து வருபவர்),அருண்(அமீனுடன் பயணிப்பவர் பாவம்). இந்த சம்பவம் முடிந்த நிலையில் மற்ற தோழர்களும் வந்து இணைந்தனர். அடுத்து சொல்லவா வேண்டும் , தளபதியை கொஞ்சம் மொகைதீன் இந்த சீனை வைத்து டேமேஜ் செய்ய பாவம் தளபதி பப்ளிக் பப்ளிக் என்று கட்டுப்படுத்த முயன்றும் இயலவில்லை. அவ்வபோது தளபதி இந்த சீனால் வாரிவிடபட்டார்.
பயணம் தொடர்ந்தது ஸ்கந்தகிரிக்கு. இடது புறத்தில் செல்லும் வழியை ஒரு வழியாக அடைந்தோம். அது ஒரு தலைவர் சிலையால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல தலைவர்கள் சாலைகளின் பெயரிலும், பேருந்து நிறுத்த பெயரிலுமே பெயரளவில் இருகிறார்கள்.
அவர்களை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும்
என்பதை தப்பாக புரிந்து கொண்டோமோ என்னவோ.எத்தனை பேர் அண்ணா சாலை என்று அழைக்கும் போது அறிஞர் அண்ணாவை நினைப்பவர்கள். எனினும் அந்த சிலை ஸ்கந்தகிரிக்கு வழிகாட்டியாக
கம்பீரமாக இருந்தது.
தொடர்ந்த வலியின் வாசனை வைத்தே கண்டு பிடித்தேன் அது கிராமங்கள் என்று.அந்த மணம்தான் அங்கு வாழும் வெள்ளந்தி மனிதர்களின் மனம்.
அடுத்த எதிர்பாராத சம்பவம். ஸ்கந்தகிரியில் எங்களுக்காக மலை அடிவாரத்தில் தூங்குவது போல் காத்திருந்தது. இது காமெடி கலந்த சீரியசான சீன்.
ஸ்கந்தகிரி மலை அடிவாரம். நள்ளிரவு 2 மணி இந்த அடிவாரமும் வித்தியாசமின்றி ஒரு கோயில் மண்டபத்துடன் இருந்த்து.குதிரைகளை கட்டி பார்க் செய்வதற்குள் மண்டபத்திலிருந்து இரு உருவங்கள் எழுந்து நின்றன.அவைகள் பேய்கள் என்று ஊகிபதற்குள் அருகே வந்து காவல் அதிகாரிகள் என்று உறுதி செய்தன.
முதலில் மலைக்குள் செல்ல அனுமதி இல்லை எனறார்கள்
பிறகு 7 மணிக்கு மேல் வாருங்கள் என்றனர்
பிறகு நாங்கள் குழம்பி நிற்கையில், வெட்டுவதை வெட்டி விட்டு
பார்க்க செல்லுங்கள் என்றனர்.
இத்தனையும் கன்னடத்தில் அவர்களுடன் உரையாடி இல்லை போராடி சக மக்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் என்றாகி விட்டது
இதோ இந்த சீனில் தொலைந்து போன தளபதி, திடீர் என்ட்ரி ஆகி நாற்பது ரூபாயை காவலர் கையில் வைத்து காமெடி செய்ய, கொதித்து எழுந்த அந்த காவல் அதிகாரி. சில பல கன்னட வார்தைகளால் அர்ச்சனை நடத்தி கொஞ்சம் டெரர் ஆனது போல் நடித்தான்.
இப்பொழுது கன்னடத்தில் உரையாட தெரிந்த ஒருவர் உதவி மிகவும் தேவைபட்டது. அப்பொழுதுதான் அருண் என்டர் ஆகி கன்னடத்தில் உரையாட ஆரம்பித்தார். அட பாவி இவ்வளவு நேரம் நான் பைத்தியக்காரன் போல் அந்த போலீசிடம் போரடினேனே இவரை வைத்து கொண்டு என நினைத்து கொண்டேன்.
காவலனுக்கு லஞ்சம் முன்னூறு என்று அறிந்தவுடன்
நாற்பதிலிருந்து, 100,200௦௦...என்று படி படியாக முன்னேறி 300௦௦ ல் நின்றோம்.
ஆனால் அந்த போலீஸ் இப்போது மனதை மாற்றி கொண்டு திரும்பி சென்று விடுங்கள் என்ற பாட்டை மறுபடியும் பாட தொடங்கினான்
Wednesday, July 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
My image "Total damage" aayiduchu ungalaala.
Post a Comment