கோபங்களும் தாபங்களும் அடங்கிய பின் பல அர்த்தங்களை அறியப்படுத்தும்!!
என் கோபங்களின் பிறப்பும் இறப்பும் விசித்ரமானவை!!
கோபத்திற்கு பின் மன்னிக்கவும் என கேட்க தூண்டும்
சங்கோஜத்தை விட கோபத்தை அடக்குவது எளிது என தெரிகிறது!!
இருவரின் ஒருமுறை வறண்டு போன நட்பில்
அன்பு காவிரியை அதிகப்படி பாய்ச்சினாலும் ஈரமாவதில்லை !!
கோபத்தில் அடி வாங்கிய என் நண்பன் "திருக்குறள் படித்து விட்டு சினத்தை அடக்க முடியாவிடில் என் பயன்" என்றான்
"அதனால்தான் அடி உன் மேல் மெதுவாக வீழ்ந்தது"
பரிட்சையில் பாஸ் மார்க் கிடைத்தாயிற்று !!ஹை ஸ்கோர் பண்ண முயல்வேன்!!
என்னை இகழ்தல் மற்றவர் முன் இல்லாவிடிலும்
இகழ்தலே, அதற்கு குறைத்து மார்க் போட என் மனம் மறுக்கிறது!!!
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment