Tuesday, May 12, 2009

Nam Vaaku Nam Naatirkaka

அரசியல் கட்சிகள் நடத்தும் காட்சிகள்
அரங்கேறிகொண்டு இருக்கிறது

இலங்கை தமிழரை மறந்து இருந்த கட்சி
தமிழ் ஈழம் தருவோம் என்று குரல் எழுப்புகிறது

தமிழ் ஈழம் ஆதரித்த கட்சிகள்
அந்த கொள்கைக்கு எதிர் கட்சியுடன் இனைந்து கொண்டன

அந்த எதிர் கட்சிகள் தேர்தலுக்காக
அந்த கொள்கையை ஆதரித்து கேவலமின்றி
இங்கு பிரச்சாரம் செய்கின்றன

கொள்கையில் ஒரு பிடிப்பில்லை

ஏன் இங்கு தமிழ் ஈழத்திற்காக
குரல் கொடுக்கும் தமிழ் மக்கள்
இவ்வளவு நாள் தேர்தலின் பொது
இந்த பிரச்னையை முன் வைத்தார்களா

தமிழகத்தில் அடிக்கடி ஏற்ப்படும்
மின் வெட்டிற்கு கொடுக்காத குரல்
ஈழ தமிழர்க்கு கொடுக்கபடுகிறது

ஏன் இதில் தமிழன் நலம் பாதிக்க படவில்லையா

இல்லை போராடும் தலைவர்கள்
மின்வெட்டை பார்த்ததில்லையா

விவசாயிகள் தூக்கிலிட்டு தொங்கும் பொது
உங்கள் குரல் எங்கிருந்தது

ஈழ பிரச்சனயை முன்னிறுத்துங்கள்

அதற்காக உள்ளூர் பிரச்சனையை
மறந்து விட்டு வாக்கு அளியுங்கள் என்று
சொல்ல எந்த அனுமதியும் இல்லை உங்களுக்கு

என் வாக்கு முதலில் என் நாட்டின்
தலை எழுத்தை தீர்மானிக்கட்டும்

நான் இலங்கை தமிழர்க்காக மத வாத கட்சிகளுக்கு
ஒட்டு போடா முடியுமா என்ன

கோத்ரா சம்பவமும் அங்கு இறந்த
முஸ்லிம் தோழர்களின் உயிர் இன்னும்
நினைவில் இருந்து நீங்க வில்லை

இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில்
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கால் சதவிகிதம் கூட இல்லை
அது பிரச்னை என்று தோன்றவில்லை

அதற்கு போர்க்கொடி பிடித்து தீர்வளிக்க வேண்டும்
என்று தோன்றாத போது இலங்கை தமிழரை காக்க வேண்டும்
என்று தேசத்தில் உணர்வில்லை என்ற கேள்வி நியாயமற்றது

நாம் தனியாக இருந்து
எதையும் பெற்று விட முடியாது

தமிழன் உணர்வு ஒற்றுமையை ஒருமைப்பாட்டை
உணர்த்தட்டும்
இந்தியாவில் பிரிவினையை வேண்டாம்
இல்லை தமிழ்நாட்டிற்கும்
தமிழ் ஈழம் நிலை வர வியப்பில்லை

வாக்கு நம் நாட்டின் ஐந்து வருட தலை எழுத்தை
நிர்ணயிக்க போவது
அதில் நம் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு
முதலிடம் தந்து வாகளியுங்கள்