சமீபத்தில் சந்தித்த நண்பன்
சோகத்தை ஒரு வாரமாக
நெருங்கிய நண்பனாக்கிய பரிதாபம்!!!
காரணம்,
அலுவலகம் அவன் அடையாள கயிறை
அறுப்பதற்கு இறுதி நாள் குறித்து விட்டது
இன்னும் ஒரு மாதத்தில்!!
என்னை கேட்டால்
கணினி துறையில் வேலை பார்ப்பதும்
சீட்டு கம்பனியில் பணம் போடுவதும் ஒன்றே
எப்பொழுது விட்டு செல்லும் என தெரியாது!!
இறந்து விடும் தேதி தெரிந்தால் கூட
இறந்த பின் நிம்மதி!!
அனால் இங்கு அப்படி இல்லை!!!
அதன் பின்தான் ஆரம்பமே!!
இதோ அவனை துரத்த
வாங்கிய வங்கி கடன் ஒரு பக்கம்!!
மாதம் வங்கி கணக்கில் விழி வைத்து
காத்திருக்கும் உறவுகள் இன்னொரு பக்கம்!!
இதற்கு கடன் வழங்கிய வங்கியை பழிப்பதா!
இல்லை வாங்க சொல்லிய உறவுகளை பழிப்பதா!
இல்லை விரட்டி விடும் வேலையை பழிப்பதா!
அவன் நம்பிக்கயை எழுப்பி விடும்
சில வார்த்தைகள் மட்டுமே
அவனுக்கு கொடுக்க முடிந்தது!!
அது தேவையும் கூட!!
இதோ அவன் நிலை
எனக்கு எப்போது என என் அறிவிலி
மனது நேரத்தை அளக்கிறது!!
இது உன் சொந்த தொழிலா என்ன
அதை கணித்து சுதாரிப்பதற்கு!!
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nee solurathu 100% correct.. now almost all are like that da..........
Para 1 and Para 9 are not clear and i am not feeling any link for para 10 with this!
இந்த நண்பனுக்கா என்னிடம் கேட்டிங்க .. send his resume to my mail id
Post a Comment