இலையுதிர் காலம்
பூமியோடு புணர நினைத்து
முடியாமல் சிலிர்த்து
அவிழ்த்த ஆடை இலைகள்!!
இதோ மரம் போல்
நான் என் வெட்கம் அவிழ்த்தேன்
நீ ஒரு போதும் வெட்க்கப்படவில்லை!!
என் நேரம் உனக்காக அவிழ்த்தேன்
உன் நொடியும் என்னிடம் சேரவில்லை!!
என் தூக்கம் அவிழ்த்தேன்
உன் கனவில் ஒரு நொடியேனும் நான் இல்லை!!
என் கண்ணியம் அவிழ்த்தேன்
உன் அறை கூட என் கன்னம் தீண்டவில்லை!!
இனி உயிர் அவிழ்த்தால்
உன் பார்வையாவது என் உடல் தீண்டுமா!!
Wednesday, January 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nice......after leaves fall down look like Efel Tower
Post a Comment