Tuesday, December 30, 2008

Naan Tholaitha Oru varudam

காலம் அளித்த ஒரு வருடம்
வீணாய் தொலைந்து இறக்கிறது!!

பலர்க்கு மன கவலை
வங்கி கணக்கில் சேர்த்தது பற்றி!!
வாங்க தவறிய நகைகள் பற்றி!!
வணங்க தவறிய ஆலயங்கள் பற்றி!!
விற்க தவறிய பங்குகள் பற்றி!!
இறங்கி நிற்கும் பங்கு சந்தை பற்றி!!

இதோ எனக்கு
சிரிக்க தவறிய நேரங்கள் பற்றி!!
மீதமுள்ள அன்பு பற்றி!!
துடைக்க தவறிய கண்ணீர் பற்றி!!
செலவில்லாமல் சேர்ந்து நிற்கும் மூளை பற்றி!!
உதவ தவறிய பணம் பற்றி!!
ரசிக்க தவறிய மலர்கள் பற்றி!!
பழக தவறிய உள்ளங்கள் பற்றி!!
பிரிந்து விட்ட நேசங்கள் பற்றி!!

இவ்வாறாக பட்டியல் இட
அடுத்த வருடமும் முடிந்து விடும்!!
இதில் என்ன குதூகலம்,கொண்டாட்டம்!!

1 comment: