மனிதன் ஈன்றெடுத்த
அதிசய குழந்தை கணினி!!!
அதனுடன் பூஜ்ஜியத்திலும் ஒன்றிலும்
பேச திணறிய அவன்
பல மொழிகளையும் தோற்றுவித்தான்!!
பேசி பரவசமும் அடைந்தான்!!
இவ்வாறாக கணினியின்
பல பரிமாற்றங்களில் நானும் பரவசம் அடைந்தேன்!!!
மானிடன் கடவுளையும் மிஞ்சிவிட்டான்
என பெருமிதம் கொண்டேன்!!
இதோ கணினியை நிலை குலைய செய்யும்
வைரசையும் தோற்றுவித்து,
கடவுளை போல் தானும்
தலை குனிந்து நின்றான்!!
கடவுளின் குழந்தை தான் அவன்
என நிரூபித்தான்!!!
மனிதனுடன் நோயையும் படைத்த அவனை போல்!!!
Thursday, December 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Excellent one
Post a Comment