உன் கூந்தல் தேசம் பற்றிட
பூக்களுக்குள் போரடி!!
அறிக்கை ஒன்றை விட்டு விடடி!!
அந்த போரை நிறுத்திவிடடி!!
அழகி போட்டியில்
உன் கடை கண் காட்டி விடடி!!
போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடடி!!
அழகி அர்த்தத்தை கரை சேர்த்து விடடி!!
குளிர்காற்றும் உன் மேனி பட்டு
அனல் காற்றாய் ஆனதடி!!
என் இதய துடிப்பு ஏறுதடி!!
என் இதய வால்வு வேலை மிகுதியால்
சாகுதடி!!
உன் பச்சை நரம்புகள்
இச்சையுடன் என்னிடம்
ஒளிச்சேர்க்கை செய்ய அனுமதியடி!!
உன் மேனி மலர செய்து
மோட்சம் அடைந்து பாரடி!!
உன் பூ பாதம் தேடி
ஓய்ந்து தேய்ந்த
கடல் அலைகள்,
ஆழி பேரலையாய் தேடி வந்ததடி!!
ஏமாந்து சென்றதடி!!
உன் மேல் விழுந்த மழை துளிகள்
ஆவியாகி விண்மீனாய் மின்னுதடி!!
உன் இதழ் தடவி
நகத்திற்கு சாயம் செய்த வித்தையும்
சொல்லடி!!
என் கவிதை வெள்ளம்
உன் இதயம் நோக்கி பாய்ச்ச
பயம் வந்ததடி!!
உன் பூ இதயம் குலைந்திடுமோ
என் மனமும் குழம்புதடி!!
Friday, December 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment