Wednesday, April 1, 2009

பெண்

பெண்ணே நீ பிறரால் ரசிக்க பிறந்தாய்!!
ஆனால் மனதால் ரசிக்க மறந்தாய்!!
பூவை நீ ரசித்திருந்தால்
சூடியிருக்கமாட்டாய்!!
ரசித்துப்பார் ரசிக்கப்படுவாய்!!
நேசித்துப்பார் நேசிக்கப்டுவாய்!!

Thursday, March 26, 2009

Therdhal

தேர்தல் காலம்,
வெள்ளை அணிந்த கொள்ளையர்களின்
வசந்த காலம்

தேர்தல் நாள், கரை படிந்த கரங்களை
தேர்ந்தெடுக்க என் விரல்கள் கரையாகும் நாள்

பிரச்சாரம், குரைக்கும் நரிகளின் ஓயாத ஊர்வலம்

நடிகர்கள், வாய்ப்பில்லாதவர்களுக்கு
வில்லனாக நடிக்க வாய்ப்புகள்

ஜனநாயகம் ,ஜனவில்லன்களின் கைய்யால்
பந்தாடப்படுவது

அறிக்கை, திருடர்களே இலவசங்கள்
பட்டியலிடும் வேடிக்கை

கட்சி பெயர்கள்,
எல்லா ஓநாய் கூட்டங்களுக்கும்
பெயர்கள் வேறு வேறு,
இதில் கட்சி தாவல் என்று செய்தி வேறு

அரசியல்வாதிகள், காரி உமிழ்ந்தும் மீண்டும் மீண்டும்
வாசல் வரும் கரை வேட்டிகள்

ஊராட்சி ஒன்றியங்கள் தயார் நிலையில்
வையுங்கள் நாய் வண்டிகளை,
வெளியில் வரும் சொறி நாய்கள் அனைத்தையும்
வேட்டையாடுவதற்கு

தாய்மார்களே தயார் நிலையில் வையுங்கள்
உங்கள் வெலக்கமாரை,
நாட்டை சீரழிக்கும் நரிகள்
வீட்டை சுற்றி வரும் நேரம்

Wednesday, March 18, 2009

Java

ஜாவா நீ வீணாக
என் நியுரான்களில் தமிழுடன் சண்டயிடாதே

இளமையான தமிழின் வயது அறிய கூட
உன் BUffer-ல் இடமில்லை
உனக்கு வயதும் இல்லை

நீ என் நியுரான்களில் பதிந்திருப்பது
கூட தமிழ் வடிவம்தான்

உன்னில் ப்ரோக்ராம் எழுத
சிந்திப்பதும் என் தாய் தமிழில்தான்

முன்றொரு நாள் நீ இருந்த இடத்தில
C இருந்தான்
இன்று நீ
நாளை யாரோ

தமிழ் அப்படி இல்லை
என் நியுரான்கள் பிறந்து
நடை பழகியது தமிழில்தான்

தமிழ் என் உயிரில் கலந்தது
மூச்சில் நிறைந்தது

அதனுடன் சண்டையிட்டு
என் நியுரான்களில் இருந்து
வீணே இறந்து விடாதே

Monday, March 16, 2009

En Kaneer

நான் அழுத துளிக்கு மட்டும்
என் மனம் தெரியும்

எனக்காக விழுவதற்கு
எப்பொழுதும் நீ இருக்கிறாய்

கண்ணீர் நீ என் கவலையை கரைக்கும்
பன்னீர்

உன் ஒரு துளியில் என் ஓராயிரம்
கவலைகள் ஆவியாகிறது

என் மனம் பூவாகிறது

என் உயிரில் நீ மட்டும் வற்றி விடாதே
என்னை தனியே விட்டு விடாதே

En Manam

நன்மை செய்வதற்கு
நொடியும் சிந்திக்காத
என் மனம்,

சில சமயங்களில்
தீங்கிற்கும் அப்படியே
நடந்து விடுகிறது

ஆயிரம் தீமைகளை
ஒரு நன்மைக்கு மறைக்கும் சக்தி உண்டென்றால்

ஒரு தீங்கிற்கு செய்த நன்மைகளை
குழி தோண்டி புதைக்கும் சக்தி இருப்பதில் வியப்பில்லை

என மனம் அடிக்கடி படிக்க வேண்டிய கவிதை

Friday, March 6, 2009

அலுவலகத்தில் Dumb Charades

அலுவலகத்தில்
dumb charades

அதில் "மும்பை மேரி ஜான்"
திரைப்படத்தை ஊமை மொழியில்
நடித்து காட்ட வேண்டும்

இதோ நடித்தவர் கைய்யால் வரைந்த
இந்திய வரைபடத்தில்
துப்பாக்கி சூடு நடத்தி காட்ட
அடுத்த நொடியில் படம் ஊகிக்கப்பட்டது

இன்னும் சில காலங்களில் இது போல்
துப்பாக்கி சூடு எங்கும் காணும் பட்சத்தில்
எவ்வாறு இந்த படம் நடித்து காட்ட படுமோ!!

இதில் ரசித்தது
அந்த படமும் மும்பையில் நடந்த
குண்டு வெடிப்பு பற்றியது

இதோ என் ஞாபக மறதியையும் மீறி
நினைவுக்கு வந்த தினங்கள்
9/11 - அமெரிக்கா
7/7 - லண்டன்
27/12 - பாகிஸ்தான் பெனஜிர்
25/7 - பெங்களூர்
26/7 - (அகமதாபாத்-டெல்லி)
26/11 - மும்பை
3/3 - பாகிஸ்தான்

மனங்கள் இல்லா மனிதர்கள்
தினங்களுக்கு இரத்த திலகமிடுகிறார்கள்
பிணங்களால் மண்ணிற்கு உரமிடுகிறார்கள்

புரியவில்லை
என்ன வேண்டும் என்று இந்த
மா மனிதர்களுக்கு!!

Thursday, February 26, 2009

Kadavul

கண்கள் இல்லை உனக்கு
இருந்திருந்தால் கண்ணீர் அறிந்திருப்பாய்
துடைத்திருப்பாய்

பசி இல்லை உனக்கு
இருந்திருந்தால் பசி தீர்த்திருப்பாய்

வயதில்லை உனக்கு
இருந்தால் முதுமை அடைந்திருப்பாய்
வலி உணர்ந்திருப்பாய்

இருதயம் இல்லை உனக்கு
இருந்திருந்தால் இன்னல் கண்டு
துடித்திருப்பாய் துடைத்திருப்பாய்

இருதயம் உள்ள கடவுள்கள்
பிறக்கட்டும்

இந்த பூமி சொர்க்கமாகட்டும்