Wednesday, January 28, 2009

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்

பூமியோடு புணர நினைத்து
முடியாமல் சிலிர்த்து
அவிழ்த்த ஆடை இலைகள்!!

இதோ மரம் போல்

நான் என் வெட்கம் அவிழ்த்தேன்
நீ ஒரு போதும் வெட்க்கப்படவில்லை!!

என் நேரம் உனக்காக அவிழ்த்தேன்
உன் நொடியும் என்னிடம் சேரவில்லை!!

என் தூக்கம் அவிழ்த்தேன்
உன் கனவில் ஒரு நொடியேனும் நான் இல்லை!!

என் கண்ணியம் அவிழ்த்தேன்
உன் அறை கூட என் கன்னம் தீண்டவில்லை!!

இனி உயிர் அவிழ்த்தால்
உன் பார்வையாவது என் உடல் தீண்டுமா!!

Sunday, January 25, 2009

PaniPor

பூமியை அணைக்க
துடிக்கும் சூரியனை
வரவிடாமல் பனிப்போர்
நடத்தியது காலை பனி!!

தூரத்தில் பனி
அருகில் சென்று
அணைக்க நினைத்தால்
நழுவி சென்று
தூரமாகும்!!
என்ன கண்ணாமூச்சி ஆட்டமிது
அதிகாலையில்!!

இதோ அங்கங்கு
பனியில் நடந்து இருந்த மனிதர்கள்
கண்ணை கட்டாமல் கண்ணாமூச்சி
ஆடுவதாய் பட்டது!!

சிலந்தி வீடுகள்
பனி துளியில்
விளக்கேற்றி விழா
நடத்தியது!!

இந்த உயிர் சென்று
குத்தும் பனியில்,
காதலியின் 100%
முத்தமும் சூடேற்றுமா
என சந்தேகம் எனக்கு!!

எழும்பும் சதையுமாக
70 கிலோ பிண்டம்
தாங்க முடியவில்லை
குளிரை!!
மில்லிகிராம் பூக்கள்
இதில் சிரித்து மகிழும் அதிசயம்!!

Manidham

புல்லாங்குழலை மூங்கிலல்லாத
இன்னொரு மரத்தில் கட்டி
வைத்து விற்று கொண்டிருந்தான் சிறுவன்

புல்லாங்குழலாய் மாற
வழியில்லை என்றாலும்,
அதை சுமந்து விற்பதற்கு
இன்னொரு மர கம்பு
மாட்டேன் என்று சொல்லாமல்
மகிழ்ந்து குனிந்தது!!

இது மறந்துபோன மனிதத்தை
மரங்கள் மனிதர்களுக்கு
உணர்த்தியாதாக கண்டேன்!!

மனிதர்களே
இயற்கையை உற்று கவனிப்போம்!!
தொலைத்த வாழ்க்கையை
தேடி தேடி தொலைந்திடுவோம்!!

Tuesday, January 20, 2009

My ipod Shuffle(En Kuyil)

ஆப்பிள் வழங்கிய சாதனத்திற்கு
அவன் மெல்லிய உருவம் கண்டு
நான் இட்ட பெயர் குயில்!!!

இந்த குயில் பாட தெரிந்த
ஊமை!!

இவன் ஊமை மொழிகள்
பாடு,
நிறுத்து,
வரிசையை மாற்று,
சத்தத்தை கூட்டு, குறை
இவற்றில் அடங்கும்!!

அலுவலத்தில்
அன்பளிப்பாக கிடைத்தவன்!!
அவனுக்கு அன்பளிப்பாக
எனை ஆக்கி கொண்டான்!!

இதோ இவன் இதழ்களும்
என் செவிகளும் சேர்ந்த நேரம்,
சித்ராவும்,ரெஹ்மானும்
காதருகில் கச்சேரி நடத்தும் நேரம்!!

வைரமுத்து வரிகளின்
ஆழ்ந்த அர்த்தங்களை
அறிய வைத்தவன் இவனே!!

இருவரும் இப்படி சிநேகம்
கொள்வோம் என்று
நினைக்கவில்லை அன்று!!

இவன் இன்றி என் பொழுது
இனிய பொழுது இல்லை!!

இவனின்றி என் தனிமையில்
இனிமை இல்லை!!

Thursday, January 15, 2009

இரவை முழு அர்த்தமாக்கு!!!

இறுக்கம் என்ற சொல்லை
நம் இரவில் செய்து பார்ப்போம்!!
அதை மிஞ்சி விட தினமும்
முயற்சி செய்து பார்ப்போம்!!

அணைப்புக்கு முழு அர்த்தம்
தந்து பார்ப்போம்!!
நம் செல்களெல்லாம் முத்தமிட்டு
சிலிர்க்க செய்து பார்ர்ப்போம்!!

நம் கைகளுக்கு ஓய்வுதனை
இரவெல்லாம் ஒத்தி வைப்போம்!!
நம் வெட்க்கம் எனும் சருகுகளை
காமத்தீயில் போட்டெரிப்போம்!!

நம் பகல் வேலை இந்த யாகத்திற்கு
விரதம் என்று கொள்வோம்!!
இரவெல்லாம் விரதத்தை முடித்து
கொண்டே இருப்போம்!!

வேண்டாம் வேண்டாம்
ஒய்வு வேண்டாம் நம் செல்களுக்கு!!
அவை எல்லாம் முத்தமிட அணைத்து கொள்க !!
அணைப்பு என்ற சொல்லின் அர்த்தம் சேர!!

இந்த இருள் மைதானத்தில்
நாம் விளையாடும் இரு வேறு அணியினர்!!
போட்டியின்றி புதுமை இல்லை
புத்திக்கு சொல்லி கொள்வோம்!!

ஒவ்வொரு இரவிற்கும் ஒரு புதுமை
சொல்லி கொடுப்போம்!!
பழமையிலும் இனிமை உண்டு
கருத்தில் கொள்வோம்!!

என் இதழ் ரேகைகள்
உன் மேனியில் தேய்ந்து இறக்கட்டும்!!
உன் இதழ் ரேகைகள்
என் மேனியின் ரேகைகள் ஆகட்டும்!!

முத்தமென்றால் என்ன என்று
முத்தத்திற்கு சொல்லி கொடுப்போம்!!
முத்தமிட்டு முத்தமிட்டு
உயிர் சாறு மாற்றி கொள்வோம்!!

நாம் முத்த சண்டையில்
பயந்து ஓடிய இருட்டுதான்,
துணைக்கு சூரியனை அழைத்து வந்து
பகல் பொழுதாய் நின்றதடி!!

நம் விரதமும் தொடர்ந்ததடி!!!

Monday, January 12, 2009

Mounam etthanai Alagu!!!

மௌனம் எத்தனை அழகு என்று

வெற்றியை ஒரு துளி கண்ணீரால்
ரசித்தவனக்கு தெரியும்!!

பொங்கிவந்த கோபத்தை ஒரு நொடி மௌனத்தால்
அணை போட்டவனுக்கு தெரியும்!!

பிறந்ததிலிருந்து மௌனமாக சுற்றி கொண்டிருக்கும்
பூமிக்கு தெரியும்!!

சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களுக்கு தெரியும்!!!

கண்களின் மௌன மொழிகளால்
காதலித்தவர்களுக்கு தெரியும்!!

தனிமையில் தன் மன ஓட்டத்தை
ஒரு நிமிடம் ரசித்தவனுக்கு தெரியும்!!

ஏன் இசையை முழுமையாக ரசிக்க கூட
மௌனம் தேவைப்படுகிறது!!

இதை மறந்த மனங்கள் இனியாவது
மௌனத்தை ரசிக்க பழகட்டும்,

அப்போது பரபரப்பான சாலையும்
சத்தமில்லாமல் மௌனமாக ரசிக்க
மனம் விரும்பிடும்!!

Sunday, January 11, 2009

Indian of 2008 :)))

காலையில் அலுவலக தேநீர் வேலை
நான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு!!!

இதோ தொலை காட்சி
இந்தியன் 2008 ஐ பட்டியலிட விளம்பரப்படுத்தி
கொண்டிருந்தது!!!

இந்தியாவில் அனைவரும் இந்தியர்களாக இல்லை
என்பதற்கு இன்னொரு சாட்சி!!

அவர்களை தேடி கண்டுபிடித்து பாராட்டும்
அவல நிலை இந்த பாரத தேசத்தில்!!

என்று மாறுமோ இந்த நிலை!!!