Thursday, February 5, 2009

Manangal Valigal Palagattum

நம் மனங்கள் வலிகள் மறந்தன!!
கண்கள் கண்ணீர் மறந்தன!!
உயிர்கள் துடிப்பது மறந்தன!!
பூ மோதினால் பூகம்பம் என்ற நிலை!!

நம் உயிர்கள் AC யில்
இருந்து வாழ பழகி விட்டது!!

கடைசியாக வலித்தது
அலுவலத்தில் சக ஊழியர் மோதியது!!

இறுதியாக அழுதது
காய்ச்சலுக்காக மருத்துவர் ஊசி இட்டது!!

இறுதியாக இழந்தது
சம்பள உயர்வில் எதிர் பார்த்தது குறைந்தது!!

இதோ இலங்கை எனும் தேசம்,
நிலாவில் இருந்து பார்த்தால்
இரத்த கரையுடன் ஒரு புள்ளி,
பூமிக்கு இட்ட திலகம் போன்று!!

இங்கு வாழ்க்கை தொலைப்பதற்கு!!

நொடிகள் உயிர்களை பிடித்து கொள்ள!!

இரத்தங்கள் கண்ணீராக!!

கண்ணீர் வற்றியவயாக!!

மரணங்கள் ஒரே விசேஷங்களாக!!

ஓலங்கள் ஓசையாக!!

மண்டை ஓடு விளையாடும் பந்துகளாக!!

கோவில்கள் ஒழிந்து கொள்வதற்காக!!

உயிரை பிடித்துக்கொல்வதே வேலையாக!!

நேற்று காதலர்கள்
இன்று அவர்கள் காதல் மட்டும்!!

நேற்று நேசித்தவர்கள்
இன்று அவர்கள் நேசங்கள் மட்டும்!!

இனியாவது நமது உயிர் வலிகளுக்கு
பழகட்டும்!!

வலிகளை உணர பழகட்டும்!!

1 comment:

Abbasin Kirukkalkal said...

இதோ இலங்கை எனும் தேசம்,
நிலாவில் இருந்து பார்த்தால்
இரத்த கரையுடன் ஒரு புள்ளி,
பூமிக்கு இட்ட திலகம் போன்று!!