Thursday, June 4, 2009

Theme to celebrate Environment Day from Me

Please leave your vote for the one you liked...Thanks

"One day to think beyond Cubicle, All days to act up on"

"To water the plants, Plant the plants"

"There are people to fight for earth, Lets unite to save the earth"

"Lets inject G(Green) +ve to our neurons today"

"Lets our blood be red, Lets make our mind green"

"Wish Green, Think Green"

"To love nature, think about nature"

"Earth cant insure its life,Its our duty to ensure earth has a life"

"To Breath O2, Reduce CO2"

Tuesday, June 2, 2009

அரவணைப்பு

இரு சக்கர வாகனத்தில்
ஒரு மினி குடும்பம்!!

குழந்தையை ஒரு கையில்
கணவனை மறு கையில்
தாங்கியவாறு தலைவி..

வாகனம்
பாலத்தில் ஏறுகிறது
'U' வளைவில் வளைகிறது
பள்ளங்களில் குதிக்கிறது
வேகத்தடையில் சீறுகிறது

இத்தனையும் தாலாட்டாய்
நினைத்து தூங்கும் குழந்தை!!

குழந்தைக்கு,
தாயின் அரவணைப்பில்
போர்களமும் தொட்டில்தான்!!
பூகம்பமும் தாலாட்டுதான்!!

Tuesday, May 12, 2009

Nam Vaaku Nam Naatirkaka

அரசியல் கட்சிகள் நடத்தும் காட்சிகள்
அரங்கேறிகொண்டு இருக்கிறது

இலங்கை தமிழரை மறந்து இருந்த கட்சி
தமிழ் ஈழம் தருவோம் என்று குரல் எழுப்புகிறது

தமிழ் ஈழம் ஆதரித்த கட்சிகள்
அந்த கொள்கைக்கு எதிர் கட்சியுடன் இனைந்து கொண்டன

அந்த எதிர் கட்சிகள் தேர்தலுக்காக
அந்த கொள்கையை ஆதரித்து கேவலமின்றி
இங்கு பிரச்சாரம் செய்கின்றன

கொள்கையில் ஒரு பிடிப்பில்லை

ஏன் இங்கு தமிழ் ஈழத்திற்காக
குரல் கொடுக்கும் தமிழ் மக்கள்
இவ்வளவு நாள் தேர்தலின் பொது
இந்த பிரச்னையை முன் வைத்தார்களா

தமிழகத்தில் அடிக்கடி ஏற்ப்படும்
மின் வெட்டிற்கு கொடுக்காத குரல்
ஈழ தமிழர்க்கு கொடுக்கபடுகிறது

ஏன் இதில் தமிழன் நலம் பாதிக்க படவில்லையா

இல்லை போராடும் தலைவர்கள்
மின்வெட்டை பார்த்ததில்லையா

விவசாயிகள் தூக்கிலிட்டு தொங்கும் பொது
உங்கள் குரல் எங்கிருந்தது

ஈழ பிரச்சனயை முன்னிறுத்துங்கள்

அதற்காக உள்ளூர் பிரச்சனையை
மறந்து விட்டு வாக்கு அளியுங்கள் என்று
சொல்ல எந்த அனுமதியும் இல்லை உங்களுக்கு

என் வாக்கு முதலில் என் நாட்டின்
தலை எழுத்தை தீர்மானிக்கட்டும்

நான் இலங்கை தமிழர்க்காக மத வாத கட்சிகளுக்கு
ஒட்டு போடா முடியுமா என்ன

கோத்ரா சம்பவமும் அங்கு இறந்த
முஸ்லிம் தோழர்களின் உயிர் இன்னும்
நினைவில் இருந்து நீங்க வில்லை

இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில்
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கால் சதவிகிதம் கூட இல்லை
அது பிரச்னை என்று தோன்றவில்லை

அதற்கு போர்க்கொடி பிடித்து தீர்வளிக்க வேண்டும்
என்று தோன்றாத போது இலங்கை தமிழரை காக்க வேண்டும்
என்று தேசத்தில் உணர்வில்லை என்ற கேள்வி நியாயமற்றது

நாம் தனியாக இருந்து
எதையும் பெற்று விட முடியாது

தமிழன் உணர்வு ஒற்றுமையை ஒருமைப்பாட்டை
உணர்த்தட்டும்
இந்தியாவில் பிரிவினையை வேண்டாம்
இல்லை தமிழ்நாட்டிற்கும்
தமிழ் ஈழம் நிலை வர வியப்பில்லை

வாக்கு நம் நாட்டின் ஐந்து வருட தலை எழுத்தை
நிர்ணயிக்க போவது
அதில் நம் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு
முதலிடம் தந்து வாகளியுங்கள்

Wednesday, April 1, 2009

பெண்

பெண்ணே நீ பிறரால் ரசிக்க பிறந்தாய்!!
ஆனால் மனதால் ரசிக்க மறந்தாய்!!
பூவை நீ ரசித்திருந்தால்
சூடியிருக்கமாட்டாய்!!
ரசித்துப்பார் ரசிக்கப்படுவாய்!!
நேசித்துப்பார் நேசிக்கப்டுவாய்!!

Thursday, March 26, 2009

Therdhal

தேர்தல் காலம்,
வெள்ளை அணிந்த கொள்ளையர்களின்
வசந்த காலம்

தேர்தல் நாள், கரை படிந்த கரங்களை
தேர்ந்தெடுக்க என் விரல்கள் கரையாகும் நாள்

பிரச்சாரம், குரைக்கும் நரிகளின் ஓயாத ஊர்வலம்

நடிகர்கள், வாய்ப்பில்லாதவர்களுக்கு
வில்லனாக நடிக்க வாய்ப்புகள்

ஜனநாயகம் ,ஜனவில்லன்களின் கைய்யால்
பந்தாடப்படுவது

அறிக்கை, திருடர்களே இலவசங்கள்
பட்டியலிடும் வேடிக்கை

கட்சி பெயர்கள்,
எல்லா ஓநாய் கூட்டங்களுக்கும்
பெயர்கள் வேறு வேறு,
இதில் கட்சி தாவல் என்று செய்தி வேறு

அரசியல்வாதிகள், காரி உமிழ்ந்தும் மீண்டும் மீண்டும்
வாசல் வரும் கரை வேட்டிகள்

ஊராட்சி ஒன்றியங்கள் தயார் நிலையில்
வையுங்கள் நாய் வண்டிகளை,
வெளியில் வரும் சொறி நாய்கள் அனைத்தையும்
வேட்டையாடுவதற்கு

தாய்மார்களே தயார் நிலையில் வையுங்கள்
உங்கள் வெலக்கமாரை,
நாட்டை சீரழிக்கும் நரிகள்
வீட்டை சுற்றி வரும் நேரம்

Wednesday, March 18, 2009

Java

ஜாவா நீ வீணாக
என் நியுரான்களில் தமிழுடன் சண்டயிடாதே

இளமையான தமிழின் வயது அறிய கூட
உன் BUffer-ல் இடமில்லை
உனக்கு வயதும் இல்லை

நீ என் நியுரான்களில் பதிந்திருப்பது
கூட தமிழ் வடிவம்தான்

உன்னில் ப்ரோக்ராம் எழுத
சிந்திப்பதும் என் தாய் தமிழில்தான்

முன்றொரு நாள் நீ இருந்த இடத்தில
C இருந்தான்
இன்று நீ
நாளை யாரோ

தமிழ் அப்படி இல்லை
என் நியுரான்கள் பிறந்து
நடை பழகியது தமிழில்தான்

தமிழ் என் உயிரில் கலந்தது
மூச்சில் நிறைந்தது

அதனுடன் சண்டையிட்டு
என் நியுரான்களில் இருந்து
வீணே இறந்து விடாதே